போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ, தலாவவை வசிப்பிடமாகக் கொண்ட சம்பத் மனம்பேரியின் உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
”இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர்களுக்கு எமது கட்சி ஒருபோதும் அனுதாபமான கொள்கையை பின்பற்றுவதில்லை,” என காரியவசம் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை என்றும், உண்மை பொதுமக்களுக்கு விரைவில் வெளிப்படுத்தப்படும் வகையில் விசாரணைகள் நிறைவடையும் என நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.