Saturday, September 6, 2025
Your AD Here

ஐ.தே.க.வின் ஆண்டு விழா திகதி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் கூடிய கட்சியின் முகாமைத்துவக் குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனை மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்