2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் 198 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிக மதிப்பெண்களை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் 194 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.